ETV Bharat / bharat

100ஆவது நாளை எட்டிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை

author img

By

Published : Dec 16, 2022, 11:14 AM IST

Updated : Dec 16, 2022, 11:53 AM IST

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செப்.7ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்று (டிச.16) 100ஆவது நாளை எட்டியுள்ளது.

Etv Bharat100  ஆவது நாளை கடந்த பாரத் ஜோதா யாத்திரை - காங்கிரஸ் தலைவர்கள் பெருமிதம்
Etv Bharat100 ஆவது நாளை கடந்த பாரத் ஜோதா யாத்திரை - காங்கிரஸ் தலைவர்கள் பெருமிதம்

ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரை இன்று (டிச.16) ராஜஸ்தானில் உள்ள தௌசாவில் 100ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த செப்.7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தி பயணத்தை தொடங்கினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘மக்களின் பிரச்சனைகளை பாரத் ஜோடோ யாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை. இந்த பயணம் 100ஆவது நாளை எட்டியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ராகுல் காந்தியை அழிக்க நினைத்த பாஜகவின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் 8 மாநிலங்கள் வழியாக 2 ஆயிரத்து 800 கி.மீ கடந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கியுள்ளது. வரும் டிச.24ஆம் தேதி டெல்லியை சென்றடைய உள்ளது. இதனையடுத்து 8 நாட்கள் இடைவெளிக்கு பின் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மீண்டும் நடைபயணம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 100ஆவது நாளான இன்று (டிச.16) ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கினார். இந்த 100 நாள் நடைபயணத்தில் ராகுல் காந்தி உடன் பல திரைப்பிரபலங்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

Last Updated :Dec 16, 2022, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.