ETV Bharat / bharat

சக மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் 2ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

author img

By

Published : Dec 13, 2022, 9:11 PM IST

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது மார்பில் அடிபட்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

Class
Class

ஃபிரோசாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், ஷிகோஹாபாத் அருகே கிஷன்பூர் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

அப்போது சிவம்(7) என்ற மாணவரின் மார்பில் சக மாணவர்கள் குதித்ததாகத் தெரிகிறது. இதில், மாணவர் அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஷிகோஹாபாத் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பிகாரில் வகுப்பறைக்குள் உயிரிழந்து கிடந்த மாணவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.