ETV Bharat / bharat

நாடாளுமன்ற கூட்டுத்தொடர் குறித்து வெங்கையா நாயுடு ஆலோசனை

author img

By

Published : May 25, 2020, 11:28 PM IST

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுத்தொடர் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

Venkaiah Naidu reviews preparedness for holding regular parl panel meetings
Venkaiah Naidu reviews preparedness for holding regular parl panel meetings

ரயில், விமான சேவைகள் தொடங்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டுத்தொடர் நடத்துவது தொடர்பாக கடந்த சனிக்கிழமை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களைத் தலைவருமான வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மக்களவை, மாநிலங்களவை பொதுச் செயலாளர்கள், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கூட்டுத்தொடர் நடைபெறுவதற்கு தகுந்த இடைவெளிகளுடன் போதிய அறைகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சர்கள், செயலர்கள், அலுவலர்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்கும் பொருட்டே அமர வைக்கப்படுவர் எனவும், நாடாளுமன்றத்தில் உள்ள அறைகள் மற்றும் அதன் இணைப்புக் கட்டடங்களில் 24 துறைகளுக்கான நிலைக்குழுக் கூட்டம் நடைபெறும், மீதமுள்ள அறைகளில் மற்ற குழுக்கான கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுந்த இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக மற்ற அறைகள் அனைத்திலும் மைக்ரோஃபோன் வசதிகளுடன் கூடிய இருக்கைகளை அமைக்குமாறு ஓம்பிர்லா மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு துறை தொடர்பான நிலைக்குழுவிலும் மாநிலங்களையிலிருந்து 10 உறுப்பினர்களும், மக்களவையில் இருந்து 21 உறுப்பினர்களும் அடங்கிய 31 உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 37 புதிய உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகவு மீதமுள்ள 18 காலியிடங்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் வெங்கையா நாயுடு கலந்துரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.