ETV Bharat / bharat

சரக்கு ரயில்கள் நிறுத்தம்: விவசாயம் பாதிப்பு!

author img

By

Published : Nov 1, 2020, 10:10 PM IST

சண்டிகர்: பஞ்சாபில் சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பெரும் பாதிப்படைந்துள்ளது.

Punjab
Punjab

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பஞ்சாபில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யூரியாவை எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதனால், ராபி பயிர்கள் பயிரிடுவதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநில வேளாண்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "மாநிலத்தில் யூரியா பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, கோதுமை மற்றும் காய்கறிகள் விவசாயம் பெரும் பாதிப்படையும். 14.50 லட்சம் டன் யூரியா ராபி காலத்தில் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 75 ஆயிரம் டன் யூரியா மட்டுமே இருப்பில் உள்ளது.

4 லட்சம் யூரியா அக்டோபர் மாதம் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சம் யூரியா மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. நவம்பர் மாதம் மட்டும் 4 லட்சம் யூரியா தேவைப்படுகிறது. கோதுமை பயிரிடும் காலம் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. 35 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் கோதுமை விவசாயம் நடைபெற உள்ளது" என்றார்.

ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து பஞ்சாபுக்கு யூரியா எடுத்துச் செல்லப்படுகிறது. ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள மாநில முதலமைச்சர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் என ரயில்வே துறை பியூஸ் கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.