ETV Bharat / bharat

சொத்துக்காக அண்ணன், அண்ணியை கொலைசெய்தவர் கைது

author img

By

Published : Feb 22, 2020, 4:54 PM IST

லக்னோ: மெயின்புரி மாவட்டத்தில் சொத்துக்காக தனது அண்ணனையும், அண்ணியையும் கொலைசெய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

young couple killed by brother for land
young couple killed by brother for land

மெயின்புரி மாவட்டத்தில் உள்ள குரவாளி என்னும் பகுதியில் விக்னேஷ் குமாரும் (35), அவரது மனைவி கீதா தேவியும் (32) வசித்துவந்தனர். இந்நிலையில் இவர்களின் குழந்தை வைஷ்ணவி நேற்று தொடர்ந்து அழும் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது தம்பதி இருவரும் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மோப்ப நாயைக் கொண்டு யார் கொலைசெய்தது என்று தேடினர்.

கொலைசெய்ய கூரான ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருந்ததையடுத்து ரத்தக் கறை படிந்த ஆடை, கொலைசெய்ய பயன்படுத்திய ஆயுதம் போன்றவை விக்னேஷ் குமாரின் தம்பி அவனேஷின் வீட்டில் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்நது நடைபெற்ற விசாரணையில் அண்ணனுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்ற அவரைக் கொலைசெய்ததாக அவனேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: பெங்களூருவில் 16 வயது சிறுவனுக்கு கட்டாய திருமணம் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.