ETV Bharat / bharat

தமிழ்நாட்டிற்கான 'பாரத் நெட்' திட்ட டெண்டர் ரத்து: மத்திய வர்த்தக அமைச்சகம்

author img

By

Published : Jun 27, 2020, 2:07 PM IST

டெல்லி: தமிழ்நாட்டில் சுமார் 12,000 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் 'பாரத் நெட்' டெண்டரில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, தமிழ்நாட்டின் ஒப்பந்தப்புள்ளியை ரத்துசெய்துள்ளது மத்திய வர்த்தக அமைச்சகம்.

Commerce Ministry
Commerce Ministry

நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை அதிவேக கண்ணாடி ஒளியிழை (ஆப்டிக்கல் ஃபைபர்) இணையச் சேவை மூலம் இணைப்பதற்காக மத்திய அரசு 'பாரத் நெட்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்மூலம் சுமார் 6.25 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை 1,950 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், டெண்டர் விடப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், முறைகேடு நடந்துள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதையடுத்து, டெண்டர் விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழ்நாட்டில் 'பாரத் நெட்' திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளியை ரத்துசெய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் உள்ள முரண்களைக் களைந்து மீண்டும் டெண்டர்விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை'- ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.