ETV Bharat / bharat

பெங்களூரு நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்... இருவரை காவலில் எடுத்து காவலர்கள் விசாரணை!

author img

By

Published : Oct 20, 2020, 9:13 PM IST

பெங்களூரு: போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கில், இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

job
job

கர்நாடகாவில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், டிஜே ஹள்ளி வழக்கில் கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சீனப்பாவுக்கு நேற்று மிரட்டல் கடிதம் வந்தது.

இந்தக் கடிதத்துடன் சேர்த்து வெடிகுண்டு பொருள்களையும் அனுப்பியிருந்ததால், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கடிதம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று (அக்.20), இக்கடிதம் அனுப்பியதில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் கர்நாடகாவில் துமக்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.