குர்ணூல் (ஆந்திரா): டிக் டாக் நட்பைத் தேடி திருமணமான பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திராவின் குர்ணூல் மாவட்டம் அடொனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா. டிக் டாக் மூலம் அஞ்சலி என்ற பெண்ணுடன் நெருக்கமாக நட்புப் பாராட்டியிருக்கிறார் அர்ச்சனா. இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரவி என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
படையப்பா' ஸ்டைலில் பாம்புடன் டிக் டாக் - கடிவாங்கி துடித்த இளைஞர்
ரவி ஓட்டுநராகப் பணி புரிகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அவர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் தான் வீட்டில் தங்குவதாகத் தெரிகிறது. இந்நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அர்ச்சனாவைக் காண அஞ்சலி வீட்டிற்கு வருவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்டச் சூழலில், நான்கு நாட்களுக்கு முன் அர்ச்சனா திடீரென குழந்தைகளுடன் மாயமாகியுள்ளார்.
சமூக வலைதளங்களை பெண்கள் கவனத்துடன் கையாளவும் - எஸ்பி
இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகாரளித்த அர்ச்சனாவின் பெற்றோர், அவரையும் இரண்டு குழந்தைகளையும் மீட்டுத் தர கண்ணீர் மல்க மன்றாடியுள்ளனர். இதன் மீது வழக்குப் பதிந்த காவல் துறையினர், அஞ்சலி, அர்ச்சனா ஆகியோரின் சமூக வலைத்தள செயல்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர்.
டிக் டாக் செயலியில் தவறாகப் பதிவிட்டால் தண்டனை - விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை
டிக் டாக் மோகத்தால் உயிரிழப்புகள், குடும்பப் பிரச்னை, கொலைகள் என்பன போன்ற பல சம்பவங்களை நாம் தினம் தினம் செய்திகள் வாயிலாகக் கண்டு வருகிறோம். ஏதோ ஒரு நிறுவனத்தின் செயலியால், அவர்களின் வருமானத்திற்காக இப்படிப்பட்ட சூழல்களை உருவாக்குவதை நினைத்து மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக அமைகிறது.