ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சி நிறுவன தினம் - முதலமைச்சர் நாராயணசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்

author img

By

Published : Dec 28, 2019, 5:07 PM IST

Updated : Dec 28, 2019, 6:45 PM IST

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி நிறுவன தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சி நிறுவன தினம்
காங்கிரஸ் கட்சி நிறுவன தினம்

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டு 135 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் நிறுவன நாளை கொண்டாடிவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

விழாவில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய்தத், அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி நிறுவன தினம்

விழாவில், பேசிய நாராயணசாமி, "மக்கள் நலனுக்காக செயல்படும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. அதனால் தான் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியின் திறமைக்கு மத்திய அரசு மூலம் விருதுகள் கிடைத்துள்ளது. ஆனால் மாநில வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் ஆளுநர் கிரண்பேடி அலுவலர்களை மிரட்டி வருவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் நிறுவன தினத்தில் ராகுல் தலைமையில் நாடு தழுவிய பேரணி

Intro:காங்கிரஸ் கட்சி  நிறுவன நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். Body:புதுச்சேரி 28-12-19
காங்கிரஸ் கட்சி  நிறுவன நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.


காங்கிரஸ் கட்சி நிறுவபட்டு 135 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கேக் வெட்டியும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர் . மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்ட தேச தலைவர்கள் உருவபடத்திற்கு முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி மக்கள் நலனுக்காக செயல்படும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது என்றும் அதனால் தான் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியின் திறமைக்கு மத்திய அரசு மூலம் விருதுகள் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி ஆனால் மாநில வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் செயல்படும் ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகள் மிரட்டி பணிய வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதால் அரசு பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

மேடை பேச்சு: நாராயணசாமி, முதலமைச்சர்Conclusion:காங்கிரஸ் கட்சி  நிறுவன நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
Last Updated :Dec 28, 2019, 6:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.