ETV Bharat / bharat

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

author img

By

Published : Nov 1, 2020, 4:25 PM IST

Updated : Nov 1, 2020, 4:31 PM IST

டெல்லி: தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Minister Duraikannu
Minister Duraikannu

கரோனா காரணமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நீண்ட நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு இரங்கல் தெரிவித்தார்.

  • Saddened by the demise of Minister in the Tamil Nadu Government, Thiru R. Doraikkannu. He made noteworthy efforts to serve society and empower the farmers. Condolences to his family and supporters in this sad hour: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) November 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”தமிழ்நாடு அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு குறித்து அறிந்து துயருற்றேன். அவர் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டார். சோகமான இந்நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: கட்சித் தலைவர்கள் இரங்கல்

Last Updated :Nov 1, 2020, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.