ETV Bharat / bharat

50 நாள்களாக எரியும் அஸ்ஸாம் எண்ணெய்க் கிணறு!

author img

By

Published : Jul 16, 2020, 1:40 AM IST

திஸ்பூர்: கடந்த மே மாதம் 27ஆம் தேதி முதல் 50 நாள்களைக் கடந்தும் அஸ்ஸாமில் உள்ள எண்ணெய்க் கிணற்றில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

50 நாள்களாக எரியும் அஸ்ஸாம் எண்ணெய் கிணறு!
50 நாள்களாக எரியும் அஸ்ஸாம் எண்ணெய் கிணறு!

அஸ்ஸாம் மாநிலத்தின் பாக்ஜானில் மொத்தம் 23 எண்ணெய்க் கிணறுகள்‌ உள்ளன. இதில் பாக்ஜான் 5ஆம் எண் எண்ணெய்க் கிணற்றில், கடந்த மே 27ஆம் தேதி கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கசிவு காரணமாக எண்ணெய்க் கிணறு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தீ 50 நாள்களை கடந்து நேற்றும் (ஜூலை15) எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசித்துவந்த ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 13 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் அப்பகுதியில் மக்கள் மட்டுமின்றி சுற்றுச்சூழல், வன விலங்குகள் என அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து பொதுத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடந்த 50 நாள்களாக பற்றி எரியும் தீயை, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அணைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.

கிணற்றை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிணறு தற்போதும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது என எண்ணெய்க் கிணற்றை ஆய்வு செய்த மேஜர் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிறுவனம் தரப்பில், 'அவ்வப்போது தீயை அணைக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நுகர்வோருக்கும் எரிவாயு விநியோகத்தை குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...10 லட்சம் திருடிய 10 வயது சிறுவன் - வங்கி மூடப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.