ETV Bharat / bharat

'நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயமாக நடைபெறும்'

author img

By

Published : Jul 12, 2020, 12:15 PM IST

ஹூப்ளி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயமாக நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Pralhad Joshi
Pralhad Joshi

கரோனா பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜூன் 1ஆம் தேதி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் அடுத்தடுத்த மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: காணொலி மூலமாக அவையை நடத்த தயாநிதி மாறன் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.