ETV Bharat / bharat

தமிழில் கவிதையை வெளியிட்ட மோடி!

author img

By

Published : Oct 20, 2019, 11:23 PM IST

டெல்லி: மாமல்லபுரம் கடல் பற்றி தான் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Modi

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். மாமல்லபுரம் சென்ற அவர் கடல் குறித்து இந்தி மொழியில் கவிதை ஒன்றை எழுதினார். அந்த கவிதையின் தமிழாக்கத்தை இன்று மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மோடியின் ட்விட்டர் பதிவு
மோடியின் ட்விட்டர் பதிவு

'அலைகடலே' எனத் தொடங்கும் அக்கவிதை ட்விட்டரில் அதிகளவில் பகிரப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

மோடி பாடலின் தமிழாக்கம்
மோடி பாடலின் தமிழாக்கம்
Intro:Body: வன்னியர்கள் வாக்கு யாருக்கு - விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன தான் சாதி ஒழிப்பு என்று பேசினாலும் இன்றும் அனைத்து அரசியில் கட்சிகளுகம் குறிப்பிட்ட சாதிய வாக்குகளை அடிப்படியாக கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.

அது போல் தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்ட மன்ற இடைத்தேர்தல் நாளை நடக்க உள்ளநிலையில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. பல கட்டத்தில் போட்டி நடந்து வந்தாலும் குறிப்பாக வன்னியர்கள் வாக்கு அதிகப்படியாக எந்த கட்சி பெரும் என்ற உச்ச கட்ட மோதல் இரு காட்சிகள் இடையே நடந்து வருகிறது.

இந்த உச்ச கட்ட மோதலுக்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை. அதில் திமுக ஆட்சி அமைத்த உடன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். தேர்தலுக்கான ஏமாற்று வேலை என பாமக நிறுவனர் இராமதாஸ் பதிலுக்கு சாடினார். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் குறிப்பிட்ட வன்னியர்கள் வாக்குகளை திமுக பிரிக்க வேண்டும் என்று வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல் தற்போது இந்த விவகாரம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே கடும் மோதலை உச்சத்திற்க்கு எடுத்து சென்றது.

வன்னியர்கள் வாக்கு அரசயில் இன்று நேற்று தொடங்கியது அல்ல 1987 இல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ராமதாஸ் தலைமையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் மூலம் தொடங்கியது. பிறகு 1988 இல் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடை வழங்கினார். தொடர்ந்து ராமதாஸ் அரசியல் கட்சி தொடங்கியதும் குறிப்பிட்ட வன்னியர்களின் வாக்குகள் அவர் வகிக்கும் கூட்டணிக்கு செல்ல தொடங்கியது. குறிப்பாக வடதமிழகத்தில் வன்னியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அரசியல் சூழ்நிலையில் பாமக தன் செல்வாக்கை இழந்துவருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் வன்னிய சமுதாய வாக்குகளை எந்த கட்சி அதிகம் பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக விக்கிரவாண்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் (2016 ) திமுக 6912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது திமுகவிற்கு கடும் சவாலாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தனியாக 41119 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்திருந்தது. இந்த சவாலை சமாளிக்கவே வன்னியர்களுக்கு திமுக ஆட்சி அமைத்த உடன் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற கருத்தும் நிலவி வருகிறது. காடுவெட்டி குரு குடும்பத்துடன் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை, திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தமிழகவாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போன்றவை திமுகவிற்கு பலம் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னியர்கள் செல்வாக்கு எந்த கட்சிக்கு உள்ளது என்பது இந்த தேர்தல் வெற்றி மூலம் தெரியும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இதில் அதிமுக தோல்வி அடைந்தாள் பாமகவிற்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.