ETV Bharat / bharat

மோடி-ஜின்பிங் 50 நிமிட பேச்சு நிறைவு

author img

By

Published : Oct 12, 2019, 11:39 AM IST

Updated : Oct 12, 2019, 12:02 PM IST

கோவளம்: சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் கண்ணாடி அறைக்குள் தனியாக நடத்திய பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது.

mamallapuram

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை அருகேயுள்ள கோவளம் தாஜ் ஓட்டலில் இன்று காலை இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு கண்ணாடி அறைக்குள் நடந்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கண்ணாடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தனர்.

தொடர்ந்து, வங்கக் கடல் அழகை ரசித்தபடி வெளியில் அமர்ந்து பேசினார்கள். இருநாட்டுத் தலைவர்களும் அப்பகுதியில் நடந்தவாறே பேசிக்கொண்டு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் சென்றனர்.

தொடர்ந்து இருநாட்டுக் குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இருநாட்டு எல்லைச் சிக்கல், பாதுகாப்பு, வர்த்தகம், சில முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியதாகக் கூறப்படுறது. ஆசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு 3500 கிலோ மீட்டர் உள்ள இந்திய- சீன எல்லைகள் குறித்த பேச்சு முக்கிய நிகழ்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Last Updated :Oct 12, 2019, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.