ETV Bharat / bharat

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

author img

By

Published : Nov 13, 2019, 11:53 AM IST

டெல்லி: கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பாஜக அரசுக்கு எதிராக வந்துள்ள இந்தத் தீர்ப்பு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka MLAs - Supreme Court says "It is equally binding on the govt and opposition."Justice NV Ramana,

கர்நாடகா

கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு (2018) மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியமைக்க மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

104 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 37 இடங்கள் கிடைத்தன.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

தனிப்பெரும் கட்சியாக விளங்கியதால் எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனைத் தடுக்கும்விதமாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தது.

அதற்கு காங்கிரஸ் கொடுத்த விலை, குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி. இந்த நிலையில் தொடர்ச்சியாக கூட்டணியில் குழப்பம் நிலவியது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.) அரசுக்கு எதிராகச் செயல்பட தொடங்கினர்.

ஆட்சிக் கவிழ்ப்பு

இவர்கள் பாரதிய ஜனதாவின் பேச்சைக்கேட்டு இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அப்போதைய சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் சர்ச்சைக்குரிய அந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

தகுதி நீக்கம்

இதற்கிடையில் தங்களை பதவி நீக்கம் செய்தது தவறு என்று அந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் எடுத்த நடவடிக்கை செல்லும் எனக் கூறினர்.

மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ.) இடைத்தேர்தலில் போட்டியிடவும் அனுமதி அளித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல்

ஏனெனில் இந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். இவர்கள் காங்கிரஸ்-மதச்சார்பற்ற கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ.) எதிராக தீர்ப்பு வந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்களின் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும். இந்தத் தொகுதிக்கு டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தன் வாயாலே கெட்ட எடியூரப்பா.!

Intro:Body:

Karnataka MLAs challenging the orders of the then Assembly speaker KR Ramesh Kumar to disqualify them: Supreme Court says "It is equally binding on the govt and opposition."Justice NV Ramana, reads out 'we do not appreciate the manner in which the petitioners came to the Court'


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.