ETV Bharat / bharat

'ஓட்டுநர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்'

author img

By

Published : Oct 18, 2019, 11:36 PM IST

ஐதராபாத்: தெலங்கானா பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் என மாநில உயர் நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

dont trouble people

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு, மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் மக்களை வஞ்சிக்கக் கூடாது என கேட்டுக் கொண்டார்.

மேலும் அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையே தேவையான பேச்சுவார்த்தை குறித்தும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இது தொடர்பாக போராட்டக்குழு செய்தித்தொடர்பாளர் அஸ்வத்தமா ரெட்டி கூறும்போது, “26 கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். அந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் வரை எங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.

எனினும் அரசோ அல்லது தொழிற்சங்கமோ போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம்” என்றார். வடமாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை போன்று, தெலங்கானாவில் 'பதுக்கம்மா' விழா பிரசித்திப் பெற்றது. இவ்விழா காலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அன்றைய தினம் மாலை ஆறு மணிக்குள் ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் அரசு மீண்டும் வாய்ப்பளிக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், பண்டிகை காலத்தில் தலைவலியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

முதலமைச்சர் விடுத்த கெடு முடிவதற்குள் பணியில் சேராதவர்களை பணியிடை நீக்கம் செய்யப்போவதாக தகவல் வெளியானது.

ஹைதராபாத் உயர்நீதிமன்றம்
அதில், எந்த சங்கத்தையும் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. ஊழியர் ஒருவர் தீக்குளித்தார். இதையடுத்து தெலங்கானாவில் போராட்டம் தீவிரம் அடைந்தது.

இதைதொடர்ந்து மாநில அரசுக்கு, தெலங்கானா உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி

Intro:Body:

dont trouble people.. highcourt advice to state govt



Today high court heard the petions on rtc strike in telangana. And the court shall hear  further  hearings on 28 th of this month.  High court also further stressed the necessity of discussions between government and rtc union.   Jac convenor ashwatthama reddy spoke with media after  high court's hearing on rtc strike. He said strike shall continue,  until 26 issues that they are raisng comes into the discussion. But will attend meeting when government or uninon calls for the meeting. He also said that government is not bothering court's word about the meeting. 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.