தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 ஆம்புலன்ஸ் வாகனங்கள் எரிந்து நாசமாகின.
ஆனால் இந்த விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் தீ காயமோ ஏற்படவில்லை. அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை ஜிவிகே- இஎம்ஆர்ஐ என்ற தனியார் நிறுவனம் நிர்வகித்து வந்தது. இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.