ETV Bharat / bharat

டெல்லியில் கூட்டத்தில் மோதிய பேருந்து: 3 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 25, 2020, 6:09 PM IST

டெல்லி: வசிராபாத் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று மக்கள் கூட்டத்தில் சென்று மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

accident
accident

டெல்லி வசிராபாத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் நந்த் நாகரி பேருந்து பணிமனை அருகே இருக்கும் பாலத்தில் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மக்கள் கூட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் இளைஞர் ஒருவர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடந்த 12 வயது சிறுவன், 22 வயது நபர் உள்பட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கூட்டத்தில் மோதிய பேருந்து; 3 பேர் உயிரிழப்பு, 4 நபர்கள் படுகாயம்!

கூட்டத்தில் கட்டுப்பாடின்றி மோதிய பேருந்தை ஆத்திரத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அடித்து நொறுக்க முயன்றனர். ஆனால் தக்க நேரத்தில் காவல் துறையினர் சம்பவம் இடம் விரைந்து அதனைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்தப் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மன உளைச்சல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.