ETV Bharat / bharat

CRDA சட்டப்படி செயல்படுங்கள், தலைநகர் விவகாரம் ஆந்திரா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Mar 3, 2022, 11:47 AM IST

புதிய தலைநகர் அமைப்பது தொடர்பான வழக்கில் ஆந்திர பிரதேச அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

பிரிக்கப்பட்ட ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகர் தொடர்பான வழக்கு ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மாநில அரசு மற்றும் மனுதாரர்களின் வாதங்களை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநில அரசு CRDA சட்டப்படி செயல்பட வேண்டும் எனவும், அமராவதி தலைநகர் வளர்ச்சிப் பணிகளை ஆறு மாதத்திற்கு நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், திட்டப்பணிகளுக்காக வேளாண் நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு உரிய மனைகளை கொடுக்க வேண்டும் எனவும், தலைநகர் வளர்ச்சிப் பணிகள் குறித்த நீதிமன்றத்தில் உடனுக்குடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை உருவாக்கும் திட்டத்தை அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு தொங்கியது. பணிகள் நடைபெற்றுவந்த சூழலில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து, ஆந்திராவுக்கு மூன்று தலைநகரை அமைப்போம் என்ற திட்டத்தை கையிலெடுத்தது. இதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், அமராவதி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மூன்று தலைநகர் திட்டத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு ஜெகன் அரசு தள்ளப்பட்டது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.