ETV Bharat / bharat

"ஐஐடிக்கு செல்ல விரும்பினால் நாட்டை காப்பது யார்?" - ராணுவ பயிற்சி இளம்பெண் சோனியா!

author img

By

Published : Mar 8, 2023, 1:33 PM IST

நாட்டில் எல்லோரும் ஐஐடி உள்ளிட்டவைகளுக்கு சென்றால் நமது நாட்டை பாதுகாக்கும் ராணுவத்திற்கு யார் வருவது? என அக்னிபத் திட்டத்தில் தேர்வாகி ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளம்பெண் சோனியா கேள்வியெழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரு: மனதில் தோன்றுவதை எல்லாம் செய்ய வேண்டும், பிடித்த பாடத்தைப் படிக்க வேண்டும், பிடித்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்று யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். நாட்டில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் இஷ்டம்போல் நகரும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு வேலை செய்வது என்றால், நம் அனைவருக்கும் ஒரு அலாதியான மகிழ்ச்சி வருகிற மாதிரி தோன்றுகிறதா?

நமது நாடே நம்மைத் தான் நம்பியிருக்கிறது, நமது நாட்டை நெருங்க வேண்டும் என்றால் நம்மைத் தாண்டி சென்றாலே அது நடக்க வேண்டும் என்று நாட்டுப் பற்றுடன் எல்லையில் கடுமையான வெயிலிலும் உறைய வைக்கும் குளிரிலும் வாட்டி எடுக்கும் சூழலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு இந்த ஏசி காற்று ஒன்றும் எட்டாக் கனியல்ல. நமது நாட்டில் எத்தனையோ தனியார்த் துறை பணிகள், அரசுப் பணிகள் என எத்தனையோ குவிந்து கிடந்தாளும் காத்திருந்து தேடி அலைந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்பது இங்குள்ள இளம் தலைமுறைகளுக்கு வழக்கமாக உள்ளது.

இருப்பினும், அண்மைக்காலங்களாக ராணுவப் பணிகளின் மீது இளம் தலைமுறையினருக்கு இருந்த நாட்டம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆங்காங்கே அதிகரித்து வரும் ஐடி நிறுவனங்கள், மரத்துக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவைகளில் சேருவதற்கு அலைமோதும் இளம் தலைமுறையினரின் கூட்டம் ஏன் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமையாக உள்ள ராணுவத்தின் பக்கம் திரும்புவதில்லை என கேள்வியெழுப்பியுள்ளார், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி.

அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், முதன்முறையாக அக்னி வீரராகத் தேர்வு செய்யப்பட்ட 100 இளம்பெண்களுக்கு அக்னிபாத் யோஜனா திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பெண் அக்னி வீராங்கனைகளாக பணியமர்த்தப்பட்டு அதற்கான பயிற்சிகள் கர்நாடகாவில் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அங்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிருந்தும் தேர்வாகிய 100 இளம் பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம், உடுப்பி பைந்தூரைச் சேர்ந்த ஸ்ரீதேவி நமது ஈடிவி பாரத்திடம் பேசியபோது, 'ராணுவ வீரர்களின் சீருடை அணிந்த காணொளிகளையே நான் எனது சிறுவயது முதல் பார்த்து வளர்ந்தேன். இதனால், நான் வேலை செய்தால் ராணுவத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று சிறு வயதிலேயே முடிவு செய்துவிட்டேன். எனக்கு ஏசி அறையில் வேலை செய்வது பிடிக்காது.

நான் என் பிகாம் பட்டப்படிப்பை முடிக்கும் போது, தார்வாட் கோச்சிங் சென்டரில் படித்துக் கொண்டிருந்தேன். எனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தினராக இருப்பதால், அக்னிபத் திட்டம் யோஜனாவில் (Agneepath army bharti yojana) நாட்டின் பாதுகாப்புப் பணிக்கான பயிற்சியில் பங்கேற்றுள்ளேன். எனக்கு இந்த சேவை செய்ய அக்னிபத் திட்டம் உதவியாக இருந்தது.

இந்த பயிற்சியைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களில் 25% பேரை இந்திய ராணுவத்தில் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இங்கு எங்களுக்கு ஆயுதங்கள் குறித்து நன்கு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் நிரந்தரமாகப் பணி கிடைக்காமல் போனாலும், பரவாயில்லை. எனக்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுகளுக்கு நமது இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பெருமையும் பாக்கியமும் கிடைக்கும். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பேசிய மங்கள்பூரைச் சேர்ந்த சோனியா, 'நாட்டில் எல்லோரும் ஐஐடி (IIT) உள்ளிட்டவைகளில் படித்து அத்துறை சம்பந்தமான வேலைகளை மட்டுமே பார்க்க ஆர்வம் காட்டினால், நமது நாட்டை யார் காப்பார்கள்? எனக் கேள்வியெழுப்பி உள்ளார். தனக்குச் சிறுவயது முதல் கனவாக இருந்த ராணுவத்தில் சேர்வதற்கு, இந்த அக்னிபத் திட்டம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக' மகிழ்ச்சியுடன் கூறினார்.

தமிழ்நாட்டிலிருந்து இந்த ராணுவ பயிற்சியில் பங்கேற்ற கவிதா கூறுகையில், எனது அப்பா ஆட்டோ ஓட்டுநராகவும், அம்மா தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்வதாகவும் கூறினார். படிக்கும்போது என்சிசியில் (NCC) இருந்ததால், எனக்கு ராணுவத்தில் பணியாற்றுவது என்றால் பிடிக்கும் என்றும் ஆகவே இந்த பணியைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். மேலு, தான் அதில் "C" சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் 600 அளவில் இந்த அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர முயன்றதில், 4 பேர் மட்டுமே தேர்வாகியதாக கூறினார். இந்தி மொழி தெரியாது என்பதால், அதனைப் பேச கற்றுக்கொண்டு வருவதாகவும், வேண்டியபடி 25% எனது பணியை தான் சிறப்பாக செய்து இப்பணியில் நிரந்தரமாக முயற்சிப்பேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அளவிலான இறகுப்பந்து போட்டி; மதுரை பெண் காவல் ஆய்வாளர் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.