ETV Bharat / bharat

விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி, 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி...

author img

By

Published : Jul 14, 2022, 5:32 PM IST

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஒருவர், விவாகரத்து ஆகிவிட்டதாக போலியான ஆவணங்களை காட்டி அடுத்தடுத்து 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

documents
documents

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த அடப்பா சிவசங்கர் பாபு என்ற நபர், இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அதில் விவாகரத்து ஆகி இரண்டாவது திருமணத்திற்காக பதிவு செய்திருக்கும், படித்த வசதியான வீட்டுப் பெண்களுடன் பேசியுள்ளார். அதில் ஒரு பெண்மணியிடம், தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும், ஐடி துறையில் பணிபுரிந்து 2 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறியுள்ளார்.

விவாகரத்து மற்றும் ஊதியத்தை நம்ப வைக்க போலியான ஆணவங்களை தயாரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை வழங்கி முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு வேலை விஷயமாக அமெரிக்கா செல்வதாக கூறி மேலும் பணம் வாங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து அமெரிக்கா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணத்தை திருப்பி தரும்படி கேட்டால், சீக்கிரமாக தருகிறேன் என மழுப்பியுள்ளார். பணத்தை திருப்பி தரும்படி வாக்குவாதம் செய்தபோது, தேவைப்பட்டால் போலீசில் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அப்போது விசாரணைக்கு போலீசார் அழைத்த நிலையில், மற்றொரு பெண்மணியுடன் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார். அந்த பெண்மணி தனது மனைவி என்றும், தான் தர வேண்டிய பணத்துக்கு அவர் சாட்சி என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பெண்களும் பேசியதில், இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த நபர் விவாகரத்து செய்யாமலேயே இருவரையும் ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பணம் பறித்துள்ளது தெரியவந்தது. ஒரே காலனியில் உள்ள மூன்று தெருக்களில், மூன்று பெண்களை இதேபோல் ஏமாற்றி, ஒரே நேரத்தில் அவர்களுடன் வாழ்ந்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

மோசடி ஆசாமி அடப்பா சிவசங்கர் பாபு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து திருமணங்கள் செய்துள்ளார். மொத்தம் 7 பெண்களை திருமணம் செய்ததாக தெரிகிறது. இவர் மீது ஆர்சி புரம், காச்சிபவுளி, எஸ்ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் தனது குடும்பத்தினருடன் சோமாஜிகுடா பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். திட்டமிட்டு பெண்களை ஏமாற்றிய மோசடி ஆசாமி அடப்பா சிவசங்கர் பாபு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுபோன்ற சம்பவங்களில் மீண்டும் ஈடுபடாத வகையில் மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினர். ஆந்திர அமைச்சரையும், பாஜக தலைவர்களும் தனது நெருக்கிய உறவினர்கள் என்று அவர் கூறிக்கொண்டதாகவும், இதை போலீசார் விசாரித்து, அப்படி யாரேனும் தொடர்பில் இருந்தால், அவர்கள் ஏமாற்றப்படும் முன்பு காப்பாற்ற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மின் கட்டண மெசேஜ்: அபேஸான அரசு அலுவலரின் ரூ.8.8 லட்சம் மீட்பு - சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.