ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் கவிழும் சிவசேனா ஆட்சி? - ஏக்நாத்திடம் தாவிய எம்.எல்.ஏக்கள்

author img

By

Published : Jun 23, 2022, 4:04 PM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மேலும் மூன்று எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியுள்ளனர்.இதன் மூலம் ஏக்நாத்தின் பலம் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கவிழும் சிவசேனா ஆட்சி?- ஏக்நாத்திடம் தாவிய  எம்.எல்.ஏக்கள்
மகாராஷ்டிராவில் கவிழும் சிவசேனா ஆட்சி?- ஏக்நாத்திடம் தாவிய எம்.எல்.ஏக்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவின் அணியில் மேலும் 3 எம்.எல்.ஏக்கள் இணைந்துள்ளனர். முன்னதாக நேற்று(ஜூன் 22) நான்கு எம்.எல்.ஏக்கள் இணைந்த நிலையில் மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தாவியுள்ளனர். இத்தோடு கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 எம்.எல்.ஏக்கள் ஷிண்டேவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் சிவசேனா கட்சியின் ஆட்சியில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருக்கிறார். ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ இல்லமான 'வர்ஷா'விலிருந்து புதன்கிழமை(ஜூன்22) தனது உறவினர்களுடன் வெளியேறினார். எம்.எல்.ஏக்கள் மும்பைக்குத் திரும்பி கோரிக்கையை முன்வைத்தால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். உத்தவ் தாக்ரே அதிகாரப்பூர்வ இல்லமான 'வர்ஷா பங்களா'விலிருந்து தனது குடும்பத்தினருடன் புறப்பட்டபோது சிவசேனா தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு கூடி அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

கட்சியிலிருந்து நீக்கிய பின்பும் தீர்மானத்தை நிறைவேற்றிய ஷிண்டே:அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்கி சிவசேனா கட்சி உத்தரவிட்டது. இருப்பினும் ஷிண்டே எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்றினார். சிவசேனா கட்சியின் தலைமைக் கொறடாவாக ’பாரத் கோகவாலே’ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இன்று (ஜூன் 23) மாலை சட்டப்பேரவைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக சுனில் பிரபு, பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்று ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார்.

முன்னதாக, தாக்கரே, ஃபேஸ்புக் மூலம் மாநில மக்களிடம் உரையாற்றினார். மேலும் தனது ராஜினாமாவை கட்சி எம்.எல்.ஏக்களிடம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் அதை ராஜ்பவனுக்கு எடுத்துச் செல்லலாம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:உத்தவ் தாக்கரே இந்துத்துவா கொள்கையிலிருந்து தவறிவிட்டார் - ஏக்நாத் ஷிண்டே ஆளுநருக்கு கடிதம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.