ETV Bharat / bharat

கேரள பழங்குடி இளைஞர் அடித்துக் கொலை வழக்கு - 14 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்!

author img

By

Published : Apr 4, 2023, 2:40 PM IST

கேரளாவில் அரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் மது கொலை வழக்கில் 14 பேரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது.

Etv Bharat
Etv Bharat

பாலக்காடு : கேரள மாநிலம் அட்டப்பாடி, கடுகுமன்னா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. கடந்த 2018-ம் ஆண்டு அரிசி திருடியதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தினர். கிராம மக்கள் அடித்து துன்புறுத்தியதில் மது படுகாயம் அடைந்தார்.

தாக்குதல் சம்பவத்தில் போலீசார் தலையிட்டு மதுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்ர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பழங்குடி ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்சி, எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேரளா காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பாக வழக்கு விசாரணை கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் 3 ஆயிரம் பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மதுவின் தாய் மற்றும் சகோதரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இரு வழக்கறிஞர்கள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நடத்திய நீதிமன்றம் 14 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் அதில் 4வது மற்றும் 11வதாக குறிப்பிடப்பட்டு இருந்தவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

14 பேர் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை (ஏப்.5) இறுதி கட்ட தீர்ப்பு வழங்க உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : 1 செல்போனில் ஒரு லட்சம் குற்றங்களா? - ரொம்ப கவனமா இருங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.