ETV Bharat / bharat

Jammu Bus Accident: ஜம்முவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி; பலர் கவலைக்கிடம்!

author img

By

Published : May 30, 2023, 11:06 AM IST

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

10 killed as bus falls off bridge in jammu and kashmir
ஜம்முவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலியான சோகம்!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகி உள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என காவல்துறையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு மாவட்டத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்தன் கோஹ்லி கூறியதாவது, "பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து, ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த பேருந்து, கட்ரா பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் உள்ள பாலத்தை கடக்கும் போதும் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்துள்ளது.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணியில், காவல் துறையுடன் இணைந்து சிஆர்பிஎப், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளவர்கள், உடனடியாக, ஆம்புலன்ஸின் உதவி உடன், சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு பலரது நிலைமை, கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து, பயணத்தை துவக்கிய இந்த பேருந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயணித்து, ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு, பக்தர்களை அழைத்து வந்து உள்ளது. திரிகுடா மலைப்பகுதியில் உள்ள முகாமில் இருந்து, 25க்கும் மேற்பட்டோருடன் பேருந்து வைஷ்ணவ தேவி கோயிலுக்கு புறப்பட்டு உள்ளது. கோயிலுக்கு, சில கிலோமீட்டர் முன்பு இந்த கோர விபத்தானது நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் 900 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.