ETV Bharat / state

என்னுடைய விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை.. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்குக் கட்டுப்படுவேன் - அண்ணாமலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 6:26 PM IST

Updated : Mar 3, 2024, 7:49 PM IST

Tamil Nadu Bjp Leader K.Annamalai: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக 39 தொகுதிகளிலும் எனக்குப் பணிகள் உள்ளது. அந்த பணிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.

Tamil Nadu Bjp Leader K.Annamalai
அண்ணாமலை

அண்ணாமலை பேட்டி

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "அரசியல் சாராத அற நெறியில் இருக்கின்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில், கொடிசியாவில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர். அதற்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து விட்டு வந்துள்ளேன். போதைப் பொருளைப் பொறுத்தவரை இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பிரச்சனை இருந்து வருகிறது.

எல்லைப் பகுதிகள் மூலம் போதைப் பொருட்கள் இந்தியாவிற்குள் வருகிறது. தற்பொழுது உள்ளூரில் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் உருவாகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த அரசியல்வாதிகள், அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் தந்தை, தாய் கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டும். பலரும் ஒன்றிணைந்து பேச வேண்டிய விஷயம் இது. பேச வில்லையென்றால் ஒரு தலைமுறை அழிந்து விடும்.

போதைப் பொருள் கடத்தல் ஜாபர் சாதிக்: கடந்த 2013ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். தற்பொழுது ஜாபர் சாதிக் தேசிய அளவில் Drug criminal ஆக உருவாகியுள்ளார். ஒருவர் மீது போதைப் பொருள் வழக்கு இருந்தால் காவல்துறை அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஜாபர் சாதிக் சென்று டிஜிபியிடம் அவார்ட் பெறுகிறார்.

திமுகவினர் அவர்களுக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். ஜாபர் சாதிக் இன்று வந்த புதிய மனிதர் அல்ல. கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், இந்த 11 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறார்.

கோவையில் ஒருவர் Suicide blast செய்கிறார் என்றால் அவர் தமிழ்நாடு அரசின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். அவரைக் காவல்துறை கண்காணிக்கவில்லை என்பதால் அவ்வாறு மாறுகிறார். இப்படி இருந்தால் தவறு எங்கிருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் ரிவ்யூ மீட்டிங் எடுக்க வேண்டும். அவர்தான் உள்துறை அமைச்சர் இந்த பொறுப்பும் அவரிடம் தான் வரும். இவர்கள் எல்லாம் எதோ புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உள்ள பழைய மனிதர்கள் தான். போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வருகின்ற 7,8 தேதிகளில் தென்காசியில் நிகழ்ச்சி ஒன்றை இது குறித்து ஏற்பாடு செய்திருக்கிறோம். இது குறித்து அரசியல் செய்ய வேண்டும். அப்படி அரசியல் செய்தால் தான் மக்களுக்கும் தெரியும். அதே சமயம் சமுதாய அக்கறையுடன் இதனைச் சரி செய்ய வேண்டும் எனவும் எண்ணுகிறோம்.

சீமான் சின்னம்: சீமான் என்னைப் பற்றி என்ன பேசினார் என்று தெரியவில்லை. அவருடைய சின்னம் வேண்டுமென்றால் முதலில் அதற்கு அப்ளை செய்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. அதற்குக் காரணம் கேட்டால் சென்னையில் வெள்ளம் வந்து விட்டது என காரணம் காட்டுகிறார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகச் சீமான் இருந்தால் அந்தச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. அவரை அப்ளை செய்ய வேண்டாம் என்று நான் ஏதேனும் கூறி இருக்கிறேனா? ஆனால் வேறொரு கட்சி அப்ளை செய்து அந்த சின்னத்தைப் பெற்று விட்டார்கள்.

அண்ணாமலைக்கும், நாம் தமிழர் கட்சி சின்னம் ஒதுக்கப்படாததற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையம் இதில் கூறியிருப்பது சரிதான் என்று கூறுகிறது. சீமான் தொண்டர்கள் தான் சீமான் மீது கோபப்பட வேண்டும். சீமானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன என்று தெரியுமா என்று கூட தெரியாமல் எதற்கெடுத்தாலும் அண்ணாமலை தான் காரணம் எனக் கூறுகிறார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை உபயோகிப்பு: பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் அவர்களை நிறுத்த முடியாது. தற்பொழுது கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் தற்பொழுது உள்ள தலைவர்களை முன்னிறுத்திப் பேசுவதில்லை. முன்னாள் தலைவர்களை முன்னிறுத்தித் தான் பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் தற்பொழுது உள்ள மோடியைப் பற்றி பேசுகிறோம்.

மோடி கர்மவீரர் காமராஜரை பற்றி பேசி இருக்கிறார். நடிகர் விஜயகாந்தை பற்றி பேசி இருக்கிறார், எம்ஜிஆர் ஜெயலலிதாவை பற்றி பேசி இருக்கிறார். விஜயகாந்தை பற்றி பேசியதால் தேமுதிக கோவப்பட முடியுமா? புரட்சித் தலைவரின் பண்புகளை நாங்கள் சுட்டிக் காட்டி இருக்கின்றோம். ராஜாஜி பண்புகளைச் சுட்டிக் காட்டி இருக்கின்றோம். காமராஜரின் புகழைப் பாடி இருக்கின்றோம். இவை எல்லாம் எங்கள் கடமை.

பி.வி.நரசிம்மராவ்க்கு பாரத ரத்னா கொடுப்பதால் காங்கிரஸ் கட்சி கோபித்துக் கொள்ள முடியுமா? சரண் சிங், பிரணாப் முகர்ஜி உள்படப் பத்துப் பாரத ரத்னா விருதுகளை இந்த 10 ஆண்டுகளில் வழங்கியிருக்கிறோம். இவர்கள் இருந்த கட்சிகள் எல்லாம் எங்களுக்குப் போட்டி கட்சிகள். அவர்களுடைய மாண்பை மக்கள் மன்றத்தில் வைப்பது தான் அதற்கு காரணம்.

புதுச்சேரியில் எம்ஜிஆர் புகைப்படம்: புதுச்சேரியைப் பற்றி நான் பேசக்கூடாது. காமராஜரை புகழ்கிறோம் என்பதற்காக அவரது புகைப்படம் எங்கள் பேனர்களில் இருக்காது. ஆனால் காமராஜரை நாங்கள் மதிக்கிறோம்.

அதேபோல ராஜாஜியை பற்றி பேசுகிறோம் என்றால் அவரது புகைப்படம் பேனரில் இருக்காது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் மட்டுமே தான் போஸ்டர்களில் இருக்கும். புதுச்சேரியில் அப்படி இருந்திருந்தால் நீங்கள் அதனைப் புதுச்சேரியில் கேட்டுக் கொள்ளுங்கள் என பதில் அளித்தார்.

அமைச்சர் பெரியகருப்பு பேசியது குறித்தான கேள்விக்கு, மோடியின் நகத்தில் உள்ள தூசிக்குச் சமம் இல்லை என்று நான் நேற்றே கூறி இருக்கிறேன். காலம் காட்சிகள் மாறும்பொழுது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

நாடாளுமன்றத் தேர்தல்: 39 தொகுதிகளிலும் எனக்குப் பணிகள் உள்ளது. அந்த பணிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை மோடி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். திருச்சியில் ஐஜேகே கட்சி பொதுக்கூட்டத்தில் கூட்டம் வராதது குறித்த கேள்விக்கு, அதனை அந்த கட்சியில் தான் கேட்க வேண்டும் என பதில் அளித்துச் சென்றார்.

இதையும் படிங்க: “வெற்றிப் படம் கொடுத்து விட்டால் ஹீரோ, இயக்குநர் எல்லாம் ஆடுகின்றனர்” - ஆர்வி உதயகுமார் கருத்து!

Last Updated :Mar 3, 2024, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.