ETV Bharat / state

“என் வீட்ல எதையாச்சும் வச்சுட்டு போய்டிங்கனா...” - ரெய்டுக்கு வந்த போலீசாரிடம் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி வாக்குவாதம்! - Youtuber Felix Gerald

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 2:37 PM IST

Raid in Felix Gerald House: சவுக்கு சங்கர் மீதான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி (Credits - ETV Bharat Tamil Nadu)

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தேனியில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது மூன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகச் சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கஞ்சா, பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான விசாரணையின் போது பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தனர்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்தனர். இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் போலீசார் சோதனைக்கு சென்ற போது, பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், போலீசார் வீட்டிற்கு உள்ளே வரும் போது காலணிகளை கழட்டிவிட்டு வரவேண்டும் என்றும், “நீங்கள் (போலீசார்) எதையாவது வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிட்டால், என்ன செய்வது?. சோதனை செய்து தான் காவலர்களை உள்ளே அனுமதிப்பேன்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தங்களை சோதனை செய்ய மறுத்த போலீசார், காலணிகளை கழட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஜாமீன் கேட்ட சவுக்கு சங்கர்... நீதிமன்றத்தின் முடிவு என்ன? - SAVUKKU SHANKAR CASE UPDATE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.