ETV Bharat / state

“பள்ளிக்கு என் மகள் பெயர் வைக்க வேண்டும்” முதலமைச்சர் விருது பெற்ற ஆயி பூரணம் அம்மாள் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 7:59 PM IST

Updated : Jan 26, 2024, 8:25 PM IST

Madurai pooranam ammal: ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தைப் பள்ளிக்காக வழங்கிய மதுரை ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது வழங்கப்பட்ட நிலையில் தனது மகள் பெயரைப் பள்ளி கட்டிடத்திற்கு வைக்க வேண்டும் எனக் ஈடிவி பாரத் செய்திகள் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

madurai pooranam ammal requests cm stalin to name school in her daughter janani
மதுரை ஆயி பூரணம் அம்மாள் பேட்டி

மதுரை ஆயி பூரணம் அம்மாள் பேட்டி

சென்னை: 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார்.

அந்த வகையில் மதுரை கிழக்கு, யா.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஆயி அம்மாள் என்ற பூரணம் அம்மாள், தனது ரூ.7 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தினை அரசு பள்ளி கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

மறைந்த தனது மகளின் (ஜனனி) நினைவாக கல்விக்காக நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளை அனைவரும் பாராட்டி வந்தனர். விருதைப் பெற்ற ஆயி என்ற பூரணம் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், “கல்விக்காக நான் தானமாக கொடுத்த செயல் இவ்வளவு பிரபலமாகும் என நினைக்கவில்லை. மற்ற உதவிகளை காட்டிலும் கல்விக்காக செய்த உதவியை அனைவரும் பாராட்டுவது நிறைவாக இருக்கிறது.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்.. முழு பட்டியல்!

எனது மகள் சொன்னதை தான் நான் செய்தேன். தான் படித்த யா. கொடிக்குளம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக எனது மகளின் எண்ணத்தின் படி எழுதிக் கொடுத்துள்ளேன்.

அதற்காக முதலமைச்சர் விருது வழங்கி உள்ளார். மேலும், வரும் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியை துவக்கி, அதில் முதலமைச்சர் மற்றும் எனது மகள் ஜனனியின் பெயர் இடம் பெற வேண்டும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி எனது வீட்டிற்கு வந்தப்போதும் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளேன்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அனைவரும் அவர்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும், பணமாக மட்டும் தான் என்று கிடையாது. பொருளாக, உடல் மூலம் நிறைய உதவிகளை செய்ய வேண்டும். என்னுடைய உயிர் உள்ள வரை உழைத்து என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே தான் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியரசு தினத்தில் 16 வயது சிறுவனுக்கு வீரதீர செயலுக்கான முதலமைச்சர் விருது.. யார் இந்த நெல்லை டேனியல் செல்வசிங்?

Last Updated :Jan 26, 2024, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.