ETV Bharat / state

சங்கரன்கோவில் அருகே பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்து.. ஒருவர் பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 1:43 PM IST

Updated : Mar 3, 2024, 2:05 PM IST

Sankarankovil Fire accident: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வெடி விபத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

Sankarankovil  Firecrackers explosion
Sankarankovil Firecrackers explosion

சங்கரன்கோவில் வெடி விபத்து

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட கொக்குகுளம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சக்தி ஈஸ்வரன் மற்றும் ராமலட்சுமி தம்பதியினர். இவர்கள் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் தயாரிக்கும் மூலப்பொருள்களை வாங்கி வந்து, அதனைத் தயார் செய்து அங்குள்ள திருவிழாக்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈஸ்வரன் மற்றும் ராமலட்சுமி தம்பதியினர் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது மனைவி ராமலட்சுமி தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த வெடி விபத்தில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஆட்டுத் தொழுவம் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் தொடங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம்.. 62 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

Last Updated :Mar 3, 2024, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.