ETV Bharat / bharat

பேடிஎம் தலைவர் திடீர் பதவி விலகல்! இதுதான் காரணமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 10:28 PM IST

Paytm Chairman resign: பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் சர்மா அறிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக பேடிஎம் நிறுவனத்தை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின்னர் தொடர்ந்து இயங்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடை விதித்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகையினை மாற்றுவது, ப்ரீபெய்டு, வேலட், பாஸ்டேக் உள்ளிட்ட காரணங்களுக்காக மார்ச் 15ஆம் தேதி வரை பேடிஎம்க்கு ஆர்பிஐ கால அவகாசம் வழங்கியது.

இந்நிலையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் சர்மா அறிவித்து உள்ளார். பேடிஎம் பேமண்ட்ஸ் நிறுவனத்தின் பகுதிநேர நான் எக்ஸிக்யூடிவ் சேர்மனாக விஜய் சேகர் சர்மா பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா அறிவித்து உள்ளார்.

இதையடுத்து பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியை மீண்டும் கட்டமைக்கும் நோக்கில் புதிய இயக்குநர்கள் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஸ்ரீநிவாசன் ஸ்ரீதர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேபேந்திரநாத் சாரங்கி, பேங்க் ஆப் பரோடா முன்னாள் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் மற்றொரு ஒய்வு பெற்ற ஐஏஎஸதிகாரி ரஜினி சேகரி சிபல் ஆகியோர் பேடிஎம் பேமண்ட்ஸ் இயக்குநர்கள் குழுவில் இணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விரைவில் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பேடிஎம் நிறுவனம், மூன்றாம் தரப்பு பயன்பாட்டு வழங்குநராக மாறுவதற்கான கோரிக்கையை ஆய்வு செய்யுமாறு தேசிய கட்டண தீர்வு நிறுவனத்திடம் (NPCI) ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் மூலம், நான்கு முதல் ஐந்து வங்கிகள் பேடிஎம் நிறுவனத்திற்கு சேவை வழங்குபவர்களாக செயல்பட முடியும். இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய UPI கட்டண செயல்பாட்டு நிறுவனமான பேடிஎம், அதன் UPI பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி ஆகிய வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படும் நிலையில் அவசர அவசரமாக விஜய் சேகர் வர்மா பதவி விலகி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுப்பு! அசுத்தமான ஆடை காரணமா? மெட்ரோ நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.