Video:சிவகங்கை ரயில் தண்டவாளத்தில் ஆயுதபூஜை கொண்டாடிய ரயில்வே ஊழியர்கள்
சிவகங்கை:இளையான்குடி சாலையில் உள்ள கேட்டில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்திற்கு சந்தனம் பொட்டு வைத்து, தேங்காய், பழம் வைத்து சிறப்புப் பூஜை நடத்தினர். மேலும் ரயில்வே கேட்டிற்கு வண்ண வண்ண கலர் பேப்பர்களை ஒட்டி வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தனர். ரயில்வே ஊழியர்களின் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.