தேசியப் பேரிடர் விழிப்புணர்வு மற்றும் மீட்புப் பணிகள் - செயல் விளக்க ஒத்திகை!
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூம்புகாரில் தேசிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் மீட்புப் பணிகள் ஒத்திகை பயிற்சி முகாம் நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு மீட்புத்துறை வீரர்கள் மீனவர்களிடையே மீட்புப் பணிகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் வருவாய்த்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர்.