திருச்சியில் 3 மணி நேரத்தில் 27 செ.மீ., மழைப்பதிவு

By

Published : Dec 6, 2021, 7:56 PM IST

thumbnail

திருச்சி: மணப்பாறையில் இன்று காலை ஆறு மணி முதல் ஒன்பது மணிவரை தொடர்ந்து மூன்று மணி நேரம் பெய்த கனமழையால் ஆரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்கள் கால் நடைகளோடு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ராஜிவ் காந்தி நகர் அருகில் உள்ள கரிச்சான் குளம், அய்யர் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பேருந்து நிலையம் உள்பட குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் துரித கதியில் நடவடிக்கை எடுத்து நீரை அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.