ஓடையில் குளிக்க சென்ற மாணவருக்கு நேர்ந்த துயரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 10 ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற மாணவர் நண்பர்களுடன் ஓடைக்கு குளிக்க சென்றுள்ளார்.அப்போது எதிர்பாரதவிதமாக வெள்ளத்தில் அவர் அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து மாணவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.