மழைநீர் கால்வாயில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு!
சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியில் மழைநீர் கால்வாய் குழியில் தவறுதலாக பசு மாட்டின் கன்றுக்குட்டி ஒன்று விழுந்துள்ளது. தகவலறிந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து, நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கயிறு கட்டி கன்றுக்குட்டியை மீட்டனர்.