ஈரோடு பவானி ஆற்றில் அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கொடிவேரி தடுப்பணையில் தொடர்ந்து சுற்றுலா பயனிகளுக்கு பொதுபணிதுறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று(செப்.12) விடுமுறை தினம் என்பதால் கோவை,மேட்டுபாளையம்,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையில் குவிந்தனர். அணையில் குளிக்க தடை நீடித்து வருவதால் சுற்றுலாவிற்க்கு வந்திருந்த பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.