சாலைகளில் திரியும் கால்நடைகளால் தொடரும் விபத்துகள்
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருக்கோவிலூர் நகரின் மையப் பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகளை இதுவரை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தவில்லை. இதன் காரணமாக நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.