வீடியோ - காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை மிரட்டிய போதை ஆசாமி
சென்னையில் குடிபோதையில் காவல் நிலையத்திற்குள் சென்று காவலரை மிரட்டிய நபரின் காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் அந்த நபரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பதும், கூலி வேலை செய்து வரும் இவர் அவ்வப்போது அபிராமபுரம் காவல் நிலையத்திலும் சிறு சிறு வேலைகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் குடி போதையில் அபிராமபுரம் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, பணியில் இருந்த காவலர் சதீஷ் குமாரை அநாகரீகமான முறையில் பேசி, தனது ஏரியாவிற்குள் ரோந்து வந்தால் வெட்டி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.