நிரம்பிய ஏரி, கிடா வெட்டி கொண்டாடிய ஊர் மக்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, தொடர்மழையால் முழுவதும் நிரம்பி கோடி சென்ற நிலையில், உபரிநீரை பூஜை செய்து வழிபாடு நடத்தி கிராமமக்கள் உற்சாகத்துடன் மலர் தூவி வரவேற்றனர். மேலும் 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஏரி நிரம்பிய உற்சாகத்தில் 10 ஆடுகளை வெட்டி பிரியாணி சமைத்து கிராமத்துக்கே விருந்து வைத்தனர்.