ஆபத்தான முறையில் கரையை கடக்கும் பள்ளி மாணவர்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பழையனூர் ஒடாத்தூர் இடையே தரைப்பாலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் நடந்து செல்கின்றனர்.