பொதுவாக நாம் செல்லும் வழியில் பழுதாகி நிற்கும் பைக், கார் ஏன் பேருந்தைக் கூட மக்கள் கைகளால் தள்ளும் காட்சியை பார்த்திருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் ஒரு படி மேலே சென்று ரயிலை கைகளால் மக்கள் தள்ளிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஹர்தா என்ற இடத்தில், பழுதாகி நின்ற மின்சார ரயிலின் இன்ஜின் பெட்டி ஒன்றை, 30 ரயில்வே ஊழியர்கள் கைகளால் தள்ளி மற்றொரு தண்டவாளத்திற்கு நகர்த்தி விடுகின்றனர். இதில் பல ஊழியர்கள், தண்டவாளத்தில் கொட்டிக்கிடக்கும் கற்களை துளியும் பொருட்படுத்தாமல் கால்களில் செருப்பு கூட அணியமல் ரயிலை தள்ளுக்கின்றனர். இந்தக் காணொலி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.