வீடியோ: அத்து மீறிய வழக்கறிஞர் - பெண் டிராபிக் போலீஸ் உடன் தகராறு
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நளசோபாராவில் பிரஜேஷ் குமார் என்ற வழக்கறிஞரின் இரு சக்கர வாகனம் போக்கு வரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள படங்கர் பூங்காவில் உள்ள குடோனில் வைக்கப்பட்டது. அந்த பைக்கை பிரஜேஷ் அத்து மீறி எடுத்து செல்ல முயன்ற போது அங்கிருந்த பெண் போக்குவரத்து போலீஸ் அதிகாரி பிரக்யா தல்வி மீது மோதினார். இது தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்கறிஞரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST