லிஃப்டில் சிக்கிய பத்து பேர்... அரைமணி நேரத்திற்கு பின் மீட்பு... கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

By

Published : Aug 20, 2022, 12:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிஃப்டில் 10 பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திடீரென லிஃப்ட் பழுதாகி இடையிலேயே நின்று விட்டது. அதில், சிக்கியுள்ள 10 பேரில் ஒரு மூதாட்டி திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் லிஃப்டை உடைத்து, அரை மணிநேர போராட்டத்திற்கு பின் அனைவரையும் மீட்டனர். உடனடியாக, அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.