விசாகப்பட்டினம்; மணமேடையில் சரிந்த மணமகள்!
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுராவாடாவில் நடந்த திருமண விழாவில் மணப்பெண் ஸ்ரீஜனா திடீரென மணமேடையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. திருமணத்திற்கு பிறகு நடத்தப்படும் வெல்லம்- சீரகம் கொண்டு செய்யப்படும் சடங்கின் போதுதான் ஸ்ரீஜனா மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST