இந்த எண்ணெய் தேய்த்தால் தூக்கம் வருமா?

author img

By

Published : Sep 23, 2022, 12:33 PM IST

இந்த எண்ணெய் தேய்த்தால் தூக்கம் வருமா?

குறிப்பிட்ட சில எண்ணெய் பயன்படுத்தினால் நிம்மதியாக தூக்கம் வரும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாகவே ஒரு மனிதருக்கு ஏழு மணி நேர தூக்கம் போதுமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வேலைப்பளு மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக சரியாக தூங்க முடியாமல் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் சில எண்ணெய் வகைகளை சரியாக பயன்படுத்தினால் நிம்மதியாக தூங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பக் எண்ணெய்: இதன் இரண்டு துளியை தூங்குவதற்கு முன்னர் தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் காலையில் எழுந்து குளித்த பிறகு, மன நிம்மதி கிடைக்கும்.

பிராங்கின்சென்ஸ் (Frankincense): ஒரு சிறிய கிண்ணத்தில் நான்கு முதல் ஐந்து துளிகளை இட வேண்டும். பின்னர் இதனுள் ஒரு பஞ்சினை மூழ்கடித்து அதனை நுகர்ந்து பார்க்க வேண்டும். அல்லது இந்த எண்ணெய் துளிகளை படுக்கையை சுற்றி சிறிது தெளிக்க வேண்டும். இதன் வாசனையால் தூக்கமின்மையை தவிர்க்கலாம்.

அத்தியாவசிய பென்சோயின் (Benzoin Essential): பென்சோயின் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணைய்- இல் பஞ்சை மூழ்க வைத்து, அதன் வாசனையை நுகர்ந்து பார்க்க வேண்டும். அப்போது எழும் வாசனையால், தூக்கமின்மை மற்றும் மூச்சுக்குழல் அழற்சி ஆகியவை நீங்கும்.

சந்தன எண்ணெய்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதனை உபயோகிக்கும்போது தூக்கமின்மை தவிர்க்கப்படுகிறது.

வலேரியன் வேர் எண்ணெய் (valerian root): ஒரு கிண்ணத்தில் இதன் மூன்று முதல் நான்கு துளிகளால் நிரப்பி, படுக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இதனால் இரவில் அடிக்கடி முழிப்பதை தவிர்க்கலாம்.

இதையும் படிங்க: ஃபேஸ் சீரமை கண்களுக்குப் பயன்படுத்தலாமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.