தந்தையின் விருப்பப்படி அவரது உடலை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்கு வழங்கிய மகன்கள்!

author img

By

Published : Sep 1, 2022, 10:06 PM IST

Etv Bharat

தந்தையின் விருப்பப்படி அவரது உடலை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்கு அவரது மகன்கள் வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச்சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சுந்தர மகாலிங்கம்(82). இவர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று அவருடைய சொந்த ஊரான வத்திராயிருப்பில் காலமானார்.

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சுந்தர மகாலிங்கம்
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சுந்தர மகாலிங்கம்

சமூக சீர்திருத்தவாதியாக இருந்த சுந்தர மகாலிங்கம், சில ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய மரண சாசனத்தில், தனக்கு எந்தவித சடங்கு சம்பிரதாயங்களும் செய்யக்கூடாது எனவும், தன்னுடைய உடலை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொடுத்து விட வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்.

தந்தையின் விருப்பப்படி அவரது உடலை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்கு வழங்கிய மகன்கள்!

இதன் அடிப்படையில் சுந்தர மகாலிங்கம் உடலை அவரது மகன்கள், மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பங்கெடுத்து ஓய்வுபெற்ற ஆசிரியரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: குழந்தை கடத்தல்காரன் என நினைத்து சந்தேகத்திற்குரியவரைத் தாக்கிய ஊர்மக்கள் - பரிதாபமாக உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.