தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து - லட்சம் ரூபாய் நாசம்

author img

By

Published : Aug 4, 2021, 10:41 AM IST

Updated : Aug 4, 2021, 11:48 AM IST

தீ விபத்து

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீப்பெட்டி செய்யும் தொழிற்சாலைகள் பல இயங்குகின்றன. அந்தவகையிஹ்ல் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கும் சொந்தமாக தீப்பெட்டி குடோன் இருக்கிறது.

இந்த குடோனுக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஒன்றும் செயல்படுகிறது. இரவு நேரத்தில் இந்த குப்பை கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படும்.

அதன் அடிப்படையில் இன்றும் குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்கப்பட்டபோது அருகிலிருந்த தீப்பெட்டி குடோனுக்கு தீ பரவியது. தொடர்ந்து தீ மளமளவென பரவியதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட 4 தீயணைப்பு வாகனங்களில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Last Updated :Aug 4, 2021, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.