Husband killed her wife: விருதுநகரில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி உயிரிழப்பு

author img

By

Published : Jan 10, 2022, 6:55 PM IST

விருதுநகரில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி பலி

Husband killed her wife: விருதுநகரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் கணவர் கத்தியால் குத்தியதில் மனைவி உயிரிழந்தார்.

Husband killed her wife: விருதுநகர் என்ஜிஓ காலனி கம்பர் தெருவைச் சார்ந்த கற்பகம் கண்ணன் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கண்ணன் திருமங்கலத்தில் வங்கி ஒன்றில் பணிபுரிந்துவருகிறார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுவந்த நிலையில் இன்று (ஜனவரி 10) காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கண்ணன் கற்பகத்தை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார்.

இதையடுத்து கண்ணன் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக காவல் துறையினர் உயிரிழந்த கற்பகத்தின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: உ.பி.யில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.