பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - காவல் ஆய்வாளர் சாட்சியம்!

author img

By

Published : Jan 25, 2023, 5:03 PM IST

Villupuram

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கு வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், புகாா் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இவர்கள் இருவர் மீதும் கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று(ஜன.24) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. முன்னாள் எஸ்.பி. நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

அரசுத் தரப்பில் சாட்சியாக விழுப்புரம் சிபிசிஐடி முன்னாள் ஆய்வாளரும், தற்போதைய கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளருமான சுந்தரராஜன் ஆஜராகி சாட்சியமளித்தாா். ஆய்வாளர் சுந்தரராஜன்தான் வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தவா்.

அவரிடம் முன்னாள் எஸ்.பி.யின் வழக்குரைஞா் குறுக்கு விசாரணை நடத்தினாா். அரசுத் தரப்பு சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி புஷ்பராணி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இதையும் படிங்க: பெண் எஸ்.பி பாலியல் வழக்கின் முக்கிய ஆவணங்கள் மாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.