பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு: முடிவுற்ற சாட்சிகள் விசாரணை

author img

By

Published : Dec 11, 2021, 7:55 AM IST

பாலியல் வழக்கு  ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் வழக்கு  பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை  பெண் ஐபிஎஸ் அலுவலரின் பாலியல் வழக்கு  பாலியல் வழக்கு விசாரணை  ஐபிஎஸ் அலுவலரின் பாலியல் வழக்கு விசாரணை  விழுப்புரம் செய்திகள்  female sp sexual harassment case  female sp sexual harassment  female sp case hearing  Villupuram Chief Criminal Judicial Arbitration Court Witnesses hearing  Villupuram Chief Criminal Judicial Arbitration Court

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் பெண் ஐபிஎஸ் அலுவலரின் பாலியல் வழக்கில், சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அலுவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், பெண் எஸ்பி பாலியல் தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று (டிசம்பர் 10) பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியின் கணவர் நேரில் சாட்சியமளித்தார். அதனைத் தொடர்ந்து அப்போதைய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.

அதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகின்ற 15, 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டிராக்டர் டிரெய்லர்களை இணையத்தில் பதிவுசெய்ய தேவையில்லை - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.