மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் - 8 பேருக்கு மறுவாழ்வு

author img

By

Published : Sep 9, 2022, 3:11 PM IST

Etv Bharat

விழுப்புரத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

விழுப்புரம் அடுத்த கக்கனூரைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் மூளைச்சாவு அடைந்ததைத்தொடர்ந்து, அவரின் உடலுறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக மருத்துவக்குழுவினரால் அவரின் உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், சிறுநீரகம், இரண்டு கருவிழிகள், இரண்டு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, சென்னை மற்றும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடல் உறுப்புகள் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு தானத்திற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார். அப்பொழுது எஸ்.பி.ஸ்ரீநாதா, டீன் குந்தவி தேவி, மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்

முளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் - 8 பேருக்கு மறுவாழ்வு

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.